காஸாவின் விஷயத்தில் மௌனம் காக்கும் அறபு முஸ்லிம் தலைமைகளையும் விமர்சகர்களையும் தனது டுவிட்டர் மூலம் எச்சரித்துள்ள சவூதி இளவரசர்


(Inamullah Masihudeen)
ஹமாஸ் இக்வானிகள் என்றால் யஹூதிகள் என்ன ஸலபிகளா ? காஸாவின் விஷயத்தில் அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்..! என இஸ்லாமிய பிரச்சாரகர் சவூதி இளவரசர் நாயிப் பின் மம்தோஹ், மௌனம் காக்கும் அறபு முஸ்லிம் தலைமைகளையும் விமர்சகர்களையும் தனது டுவிட்டர் மூலம் எச்சரித்துள்ளார்.

அதேவேளை "பலஸ்தீன் விவகாரம் எமது நம்பிக்கை கோட்பாடுகளுடன் சேர்ந்தது, ஹமாஸுடனும் முகாவமாவுடனும் முரண்பாடு இருப்பதற்காக சியோனிஸ்டுகளுக்கு துணை போக முடியாது, யஹூதிய உள்ளம் கொண்ட பெயரளவில் முஸ்லிம்கள் நம் மத்தியில் இருக்கிறார்கள்" என மக்கமாநகர் ஹரம் ஷரீபின் இமாம் ஸஊத் ஷுரைம் அவர்கள் தனது டுவிட்டர் சேவையில் கூறியுள்ளார்.

காஸாவில் போராடும் போராளிகள் யூத சாம்ராஜயத்தை கதிகலங்கச் செய்வதனை விட அண்டையில் அமைதிகாத்து அநீதிக்கு துணை போகும் முஸ்லிம் ஆட்சியாளர்களை ஆட்டம் காணச் செய்துள்ளனர் என்பதுவே மிகப் பெரிய உண்மையாகும், அறபு முஸ்லிம் உலகில் சத்தியத்தில் இருந்து அசத்தியத்தை வேறு படுத்தும் அறப்போரே காஸாவில் தற்பொழுது இடம் பெற்று வருகிறது என்றும் கூறலாம்.

இஸ்லாத்தையும்,பலஸ்தீன் மக்களையும்,உண்மை முஸ்லிம்களையும், சத்தியத்தின் வழி நிற்போரையும் எல்லாம் வல்ல அல்லாஹ் பாதுகாப்பானாக, எல்லா வகையிலும் எல்லா அரங்குகளிலும் எல்லாம் வல்ல அல்லாஹ் உண்மை விசுவாசிகளுக்கு வெற்றி மேல் வெற்றியை கொடுப்பானாக!

Post a Comment

Previous Post Next Post

Contact Form