இஸ்லாத்தில் இரு
பெருநாட்களில் நோன்புப் பெருநாளும் ஒன்று. இரு பெருநாள் தினத்திலும்
மகிழ்ச்சியுடன் களிக்க இறைவன் வழி செய்துள்ளான். அதே தினத்தை வீண் விளையாட்டிலோ, வீண்
கழியாட்டத்திலோ கழிப்பதை இஸ்லாம் தடை செய்துள்ளது. பெருநாள் தினத்தில்
முக்கியமாகப் பின்வரும் கடைப்பிடிக்குமாறு இஸ்லாம் தெளிவுபடுத்தியுள்ளது.
தக்பீர் சொல்லல். பிறை
தென்பட்டது முதல் பெருநாள் தொழுகைவரை உள்ள நேரங்களில் ஈதுல் பித்ர் தினத்தில்
சொல்வது சுன்னத்தாகும்.இரு பெருநாள் இரவுகளிலும் அதிக நன்மையில் ஈடுபடுதல். உதாரணமாக
அதிகமாக சுன்னத்துத் தொழுதல், அல்குர்ஆன் ஓதுதல்,
திக்ர், ஸலவாத்துக்கள்
ஓதல், துஆக் கேட்டல் என்பன.குளித்து சுத்தமாகிக் கொள்ளல்
(நிய்யத்து அவசியம். ஈதுல் பித்ர் சுன்னத்தான குளியை நிறைவேற்றுகிறேன்) புத்தாடை
அணிதல், புத்தாடை இல்லாவிட்டால் சுத்தமான அழகிய ஆடை அணிதல்.ஆண்கள்
மணம் பூசிக் கொள்ளல். வெளியில் செல்லாது வீட்டில் தங்கியிருக்கும் பெண்கள் மணம்
பூசுதல்.இயன்றவரை அதிகமாக தர்மம் செய்தல்.ஸதகத்துல் ஃபித்ர் கொடுத்தல், பெருநாள்
தொழுகையிலும், குத்பாவிலும் கலந்து கொள்ளல் இந்த எட்டுக் காரியங்களில்
ஸதகத்துல் ஃபித்ர் கட்டாயக் கடமையானது. ஏனையவை அனைத்தும் சுன்னத்தானது.
கடமையான ஃபித்ரா
தாம் விரும்பி உண்ணும்
உனவுப் பொருட்களையே பெருநாள் ஃபித்ரா தர்மமாக கொடுக்க வேண்டுமேயன்றி நாம்
பிரியப்படாததை, விரும்பாததை அளவுக்கதிகமாக கொடுத்தாலும் நாடிய நன்மை
கிடைக்காது என்பதை திருக்குர்ஆன் கூறுகிறது. ஃபித்ரா தர்மத்தை தனது பொறுப்பில்
உட்பட்டவர்களான தாய், தந்தை, பாட்டன் பாட்டி,
மகன், பேரன்
மனைவி ஆகியோருக்கு கொடுக்க முடியாது. இவர் சொந்த பொறுப்பிலிருப்பதால்
அவர்களுக்காகவும் நாம் ஃபித்ரா தரவேண்டும். மற்ற உறவினர்களில் ஏழை எளியவர்கள்
இருந்தால் அவர்களுக்கு முதலிடமளித்து ஃபித்ரா கொடுக்கவேண்டும்.வெளியூர்களில்
இருக்கும் ஏழை எளியவர்களுக்கு ஓரிரு நாட்கள் முன்பாகவே அனுப்புவதை இஸ்லாம்
அனுமதிக்கிறது. நபித்தோழர் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு தனது ஃபித்ரா தர்மத்தை
பெருநாளைக்கு முன்பே அனுப்பி வைத்த நிகழ்ச்சி அபூதாவூதில் இடம்பெற்றுள்ளது.
இவ்விதம் ஃபித்ரா தர்மத்தைக் கொண்டு இப்பெருநாள் தொடங்குவதால் இதற்கு ஈதுல்
ஃபித்ர் ஈகைப்பெருநாள் என பெயரானது.
நன்றி -தமிழ் ஹதீஸ்
Tags
இஸ்லாம்