( Azeez Ahmed)
மிளகையும் வெல்லத்தையும்
வெறும் வயிற்றில் உட்கொண்டால் இருமல் நீர்க்கோவை ஆகியவை குணமாகும். சீரகத்தையும்
கற்கண்டையும் மென்று தின்றால் இருமல் குணமாகும்.
நான்கு வால் மிளகைச்
சிறிதளவு புழுங்கலரிசியுடன் வாயில் போட்டு மென்று அதன் ரசத்தை பருகினால் இருமல்
குணமாகும்.
தூய்மையான அருகம்புல்லை
எடுத்து நன்றாக மென்று பற்களில் வலியுள்ள பகுதியில் ஓதுக்கினால் பல்வலி உடனே
குணமாகும்.
பல் துலக்கி பின் தேனை ஈறு
முழுவதும் தடவவேண்டும். சிறிது நேரம் கழித்து வாயைக்கொப்பளித்தால் பற்களில் உள்ள
கிருமிகள் அழியும்.
தேங்காய் எண்ணெயை
நாள்தோறும் பலமுறை உதட்டில் தடவினால் உதடு வெடிப்பு உதட்டு புண், தோல்
உரிதல் ஆகியன குணமாகும்.
அரிசியையும்
திப்பிலியையும் சிறிதளவு எடுத்து தேனில் பத்து நாட்கள் ஊறவைத்து தினம் ஒரு
திப்பிலியை வாயில் போட்டு அடக்கிக்கொண்டால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.
மழைக்காலத்தில் ஒரு தம்ளர்
பாலில் சிறிதளவு சுக்கு பொடி கலந்து இரவு குடித்து வந்தால் காலையில் புத்துணர்வு
பெறலாம்.
துளசி இலையை நன்றாக
வெயிலில் காய வைத்து பொடி செய்து டீத்தூளில் சேர்த்து டீ தயாரித்து குடித்து
வந்தால் நன்கு பசி எடுக்கும். குளிர்காலத்தில் ஏற்படக்கூடிய சளி, கபம்
நீங்கும்.
அரிசி பொரியைத் தண்ணீரில்
வேகவைத்து சாப்பிட்டால் ரத்த கொதிப்பினால் வரக்கூடிய தலை சுற்றல் குணமாகும். தலை
சுற்றலுடன் வாந்தி ஏற்பட்டால் வெங்காயத்தினை சாறெடுத்து அதனுடன் தேன் கலந்து
சாப்பிடலாம்.
துளசி இலைச்சாறு, 150 மிலி
கற்கண்டு இவை இரண்டையும் கலந்து சர்ப்பத்தாகக் காய்ச்ச வேண்டும். அதில் வேளைக்கு
ஒரு டீஸ்பூன் அளவு தினசரி இருவேளை உட்கொண்ட பின் பசும்பால் அருந்தலாம்.
இந்த சர்பத் சர்வரோக
நிவாரணியாகும். மூளை, நரம்பு, இதயம், இரைப்பை ஆகியவற்றைப் பலப்படுத்தும். ஞாபகசக்தியை
அதிகரிக்கும்.
கண்களில் நீர்வடியும்
பிரச்சனை உள்ளவர்கள் தினந்தோறும் வெறும் வயிற்றில் சில பாதாம் பருப்புகளை மென்று
தின்றால் நீர் வடிதல் குணமாகும்.
தூய்மையான தாய்ப்பாலில்
இருதுளியைக் கண்களில் விட்டால் கண் சூடு,
கண் எரிச்சல் ஆகியன
குணமாகும். மாதுளை இளைச்சாற்றில் சில துளிகளை மூக்கில் விட்டால் மூக்கில் இருந்து
ரத்தம் வடிவது நிற்கும்.
சித்தரத்தையைச் சிறிதளவு
எடுத் துப்பொடித்து, பசும்பாலில் கலந்து உட்கொண்டால் தும்மல், மூக்கில்
நீர்வடிதல் குணமாகும். பூண்டுத் தோல்,
மிளகு, ஓமம், ஆகியவற்றை
இடித்து நெருப்பு அனலில் இட்டுப்புகையைப் பிடித்தால் மூக்கடைப்பு மூக்கில்
நீர்வடிதல் முதலிய நோய்கள் குணமாகும்.
எலுமிச்சை பழத்தை பிழிந்து
சாறு எடுத்து அதை சூடு படுத்தி சிறிது தேன் கலந்து நாள் ஒன்றுக்கு 3வேளை
வீதம் உள்ளங்கையில் விட்டு உட்கொள்ள வேண்டும்.
இதனால் தொண்டை வலி தொண்டை
தொடர்பான நோய்கள் குணமாகும்.
வெறும் வயிற்றில் பச்சை
திராட்சை பழத்தின் சாற்றை பருகினால் வறட்டு இருமல் குணமாகும்.
தேனையும், எலுமிச்சை
பழசாற்றையும் சமஅளவில் உட்கொண்டால் சளி இருமல் ஆகியன குணமாகும். நீர்கோவை விலகும்.
Tags
ஆரோக்கியம்