அமெரிக்காவும், இஸ்ரேலும் பல வருடங்களாக ஈரானை அச்சுறுத்தி
வருகின்றன. தாக்குவதாக சூளுரைக்கின்றன. வெகுவிரைவில் யுத்தம் தொடங்கும் என
நினைக்கும் அளவுக்கு ஒன்றோடொன்று உரசிக்கொள்கின்றன.
காரணத்தை அறிந்து கொள்ள
விரும்புகிறீர்களா?
கீழே வாசியுங்கள் :
30 பில்லியன் டொலர் பெறுமதியான இஸ்ரேலிய முதலீடுகள் ஈரானில்
இருக்கின்றன.வெளிரங்கத்தில் ஒன்றை ஒன்று எதிர்த்தாலும் முன்னெப்போதும் இல்லாத அளவு
பாரிய பொருளாதார ஒத்துழைப்பு இவர்களுக்கிடையில் உள்ளது. (யடியோத் அஹேரோந்த் – இஸ்ரேல் நாளிதழ்)
200 க்கும் மேற்பட்ட இஸ்ரேல் கம்பெனிகள் ஈரானுடன்
வியாபாரத் தொடர்புகள் வைத்துள்ளன. இவற்றில் பெரும்பாலானவை பெற்றோலியக் கொம்பனிகள்.
(யடியோத் அஹேரோந்த் –
இஸ்ரேல் நாளிதழ்)
இஸ்ரேலில் இருக்கும்
ஈரானிய யூதர்களின் பிரதான அறிஞர் : “யதீதியா சூபத்”. இவர் ஈரான் இராணுவத் தளபதிகளில் ஒருவரான “சல்மானி” என்பவருடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்.
இரண்டு இலட்சத்திற்கும்
மேற்பட்ட ஈரானிய யூதர்கள் இஸ்ரேலில் இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் அந்த “யதீதியா” விடமே மார்க்கத்தைப் படிக்கின்றனர்.
ஈரான் தலைநகர்
தஹ்ரானில் மாத்திரம் 200
யூத வணக்கஸ்தலங்கள்.
கனடா, பிரிட்டிஷ், பிரான்ஸ் நாடுகளில் இருக்கும் 17000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஈரானிய யூதர்கள்
பெற்றோலிய கம்பெனிகளை சொந்தமாக வைத்துள்ளார்கள்.
இஸ்ரேலில் இருக்கும்
இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட ஈரானிய யூதர்கள் அங்கு பெரும் பெரும் பதவிகளிலும்
பொறுப்புக்களிலும் காணப்படுகின்றனர்.
ஈரானிய யூதர்களுக்கு
சொந்தமான வானொலி நிலையங்கள் இஸ்ரேலில் உள்ளன. சில வானொலி நிலையங்கள் ஈரானின் பண
உதவியுடனே செயற்படுகிறது.
30000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட யூதர்கள் ஈரானில் இருக்கின்றனர். இஸ்ரேலுக்கு அடுத்த
படியாக அதிக யூத கூட்டங்களைக் கொண்ட நாடுகளில் ஈரானும் ஒன்றாகும்.
இஸ்ரேல் இராணுவத்திலும்
ஈரான் யூதர்களில் பெரும்படை ஒன்று காணப்படுகின்றது.
இறுதியாக, 1979ம் ஆண்டு ஈரானில் நடைபெற்ற “சீஆப் புரட்சி” முழுமையாக இஸ்ரேல் உளவுத்துறையின் ஒத்துழைப்புடனே
செயற்பட்டது. சுன்னி நாடுகள் அதிகம் உள்ள இடத்தில் சீஆ நாடொன்றை உருவாக்கி
முஸ்லிம்கள் மத்தியில் குழப்பத்தை உண்டாக்கும் நோக்கிலே இவ்வுதவி செய்யப்பட்டது.
இன்னும் பல……
இதற்குப் பின்னரும்
இஸ்ரேல் ஈரானைத் தாக்குமா ?
நட்பு நாடாயிற்றே !!
இஸ்ரேலின் நட்பு நாடு அமெரிக்காவினதும் நட்பு நாடுதானே !!
நன்றி: techislam.com
Tags
உலகம்