ஏலக்காய் ஒரு இயற்கை
மருந்து என்பது நம்மில் பலருக்கு தெரியாமல் இருக்கலாம்,‘‘வாசனைப்
பொருட்களின் ராணி’’(Queen of the spices) என்ற செல்லப் பெயரும் ஏலக்காய்க்குஉள்ளது.
ஏலக்காயில் காணப்படும்
எளிதில் ஆவியாகும் எண்ணெய்களான போர்னியோல்,
கேம்பர்,பைனின், ஹீயமுலீன், கெரியோ
பில்லென், கார்வோன், யூகேலிப்டோல்,
டெர்பினின்,சேபினின்
ஆகியவற்றின் காரணமாக அதில் அரிய மருத்துவ குணங்கள் நிரம்பி உள்ளன.
சிறிது ஏலப்பொடியை, வெற்றிலையுடன்
மென்று தின்றால், அஜீரணம் அகலும். பசி ருசி உண்டாகும்.
ஏலப்பொடியுடன், மிளகுப்பொடி
சேர்த்து, சிறிது துளசிச்சாறில் சேர்த்துக் குடித்தால், கடும்
கபம் இளகி வெளிப்பட்டு, நலம் உண்டாகும். பக்க விளைவு இல்லாத இயற்கை மருந்து இது.
ஏலக்காய் தூள், டீ தூள்
இரண்டையும் சேர்த்து டீ தயாரித்து அத்துடன் தேன் சேர்த்து, தினம்
இருவேளை பருகி வர, நரம்புகள் வலுப்படும்.
தேனுடன், ஏலக்காய்தூள்
கலந்து, சாப்பிட்டு வர,
நரம்புத் தளர்ச்சி
நீங்கும். நரம்புகள் நன்கு இயங்கும். வலிமை அடையும்.
ஏலக்காயுடன், கறிவேப்பிலை
வைத்து மைய்யாக அரைத்து எருமைத் தயிரில் சேர்த்து மூன்று வேளை சாப்பிட்டால்
சீதபேதி குணமாகும்.
ஏலக்காய் விதைகளை
வாயிலிட்டு அடக்கிக் கொண்டு, உமிழ்நீரை விழுங்கிவர,வாய்நாற்றம் மாறும்.
நான்கு மிளகு, சிறிது
ஏலக்காய், சுக்கு இவைகளுடன் பால் தெளித்து விழுதாக அரைத்து,நெற்றியில்
பற்றிட தலை வலிதானே போகும்.
ஏலக்காய், மிளகு, சுக்கு, திப்பிலி, தனியா
இந்த ஐந்தையும் சேர்த்து கஷாயம் செய்து பருகிவர குற்றிருமல் குணமாகும்.
வெந்தயத்தை ஊற வைத்து
எடுத்து சிறிது ஏலக்காய்ச் சேர்த்து மென்று தின்றால் வயிற்றுக் கடுப்பு நீங்கும்.
சிறிது ஏலக்காயுடன்
வேப்பிலை மஞ்சள் வைத்து அரைத்து பித்த வெடிப்பு மீது பூசிவர,விரைவில்
வெடிப்பு குணமாகும்.
ஏலக்காயுடன், அதிமதுரம், மிளகு
போட்டு கொதிக்க வைத்த நீரை வடிகட்டி பருகினால்,வாந்தி, குமட்டல் உடனே நிற்கும்.
சுக்கு, ஏலக்காய், கிராம்பு
இவைகளுடன் சிறிது நீர் தெளித்து மைய அரைத்து,
சூடாக்கி கை,கால்
மூட்டுகளின் மீது பூசி வர, மூட்டுவலி குணமாகும். ஆரம்பநிலை வாதம் நீங்கும்.
ஏலப்பொடி, சீரகப்பொடி, மல்லிப்பொடி
இவைகளுடன், சிறிது கருப்பட்டி பொடித்திட்டு கலந்து, ஒரு
நெல்லிக்காய் அளவு வீதம் காலை மாலை தின்றுவர,
பித்த கிறுகிறுப்பு மாறும்.
திராட்சைச்சாறுடன், ஏலக்காய்த்தூள்
கலந்து சாப்பிட்டுவர, நரம்புத்தளர்ச்சி நீங்கும். நரம்புகள் வலுப்பெறும்.
ஏலக்காய்தூள், சுக்குப்பொடி, மிளகுப்பொடி
இவைகளை தேனில் கலந்து சாப்பிட்டுவர,தசைபிடிப்புகள் நீங்கும்.
செவ்வாழைப்பழத்துடன், சிறிது
ஏலக்காய்தூள் சேர்த்துச் சாப்பிட்டால் மாதவிடாய்க் கோளாறுகள் ஒழுங்குபடும்.
வெல்லத்தைப் பொடித்து
நீரில் கலந்து, அத்துடன், எலுமிச்சைச்சாறு,
ஏலக்காய் தூள் சேர்த்து
பானம் தயாரித்து பருகினால் கோடைத்தாகம் நீங்கும். உடல் குளிர்ச்சி அடையும். சோர்வு
மாறி புத்துணர்ச்சி ஏற்படும்.
ஏலக்காயின் முக்கியமான
பயன் என்னவென்றால். சூரிய வெப்பத்தால்,
உடலில் வெப்பம் அதிகம்
ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும். மேலும் பக்கவாதம் வராது. அதிலும் வெளியே செல்லும்
போது ஏலக்காயை வாயில் போட்டு மென்று சென்றால்,
வெப்ப அலைகள் உடலை
தாக்காமல் பார்த்துக் கொள்ளும்.
Tags
ஆரோக்கியம்